கோவை, ஜூலை 2- பொள்ளாச்சி அருகே “தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என் முன்னே புகை பிடிப்பதா” எனக் கூறி தொழிலாளர் மீது தோட்ட உரிமையாளர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த கருப்பம் பாளையம் அருகே உள்ள காளி பாளையம் கிராமத்தில் முத்து சாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் திங்களன்று தேங்காய் இறக்கும் பணியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலாளர்களில் ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்த தோட்டத்தின் உரி மையாளர்களில் ஒருவரான பருவத கண்ணன் என்பவர் சம்மந் தப்பட்ட தொழிலாளியின் சாதியை குறிப்பிட்டு என் முன் னாலேயே பீடி பிடிக்கிறாயா என ஆத்திரத்துடன் அங்கிருந்த தென்னை மட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக்கண்ட சக தொழிலா ளியும் தமிழ்நாடு தென்னைத் தொழிலாளர் முன்னணியின் பொறுப்பாளருமான செல்லமுத்து என்பவர் அவரை தடுத்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பருவத கண் ணன், செல்லமுத்துவையும் இரும்புக் கம்பியால் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த பருவத கண்ணனின் மனைவி மற்றும் அவரின் உறவி னர் ஒருவரும் தலித் தொழிலாளர்க ளுக்கு கொலை மிரட்டல் விடுத் துள்ளனர். இந்த தாக்குதலில் படுகாய முற்ற செல்லமுத்து சிகிச்சைக் காக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்ட நிலையில், அதுதொடர் பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சி யம் காட்டியுள்ளனர். இதையடுத்து தொழிலாளர் கள் மீது கொலை வெறித்தாக்கு தல் நடத்தியவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந் தோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன்பின் னர் செவ்வாயன்று மதியம் பொள்ளாச்சி- கோவை சாலையி லிருந்து சார் ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைய டுத்து பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் இரவிக்குமார் மற்றும் காவல் துறையினர் அவர் களுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதனைத்தொடர்ந்து சாதிய எண்ணத்துடன் தாக்குதல் நடத்திய பருவத கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரித்து விரைந்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதையேற்று மறியல் போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.