கோவை, செப்.19 - கோவையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வியாழனன்று நடைபெற்ற ஏலத்தில் தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.3.7 அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் ஆன்லைன் மூலம் தேயிலை ஏலம் நடைபெற்று வருகிறது. வியாழ னன்று நடைபெற்ற ஏலத்திற்கு இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 136 கிலோ தேயிலை தூள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 868 கிலோ ஏலம் போனது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் இருந்து மொத்தம் 80 சதவிகிதம் ஏலம் போனது. ஒரு கிலோ தேயிலை தூள் 95 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 91 ரூபாய் 32 காசுக்கு ஏலம் போனது. தற்போது கிலோவுக்கு 3 ரூபாய் 7 காசுகள் அதிகரித்துள்ளது. இலை ரக தேயிலை 95 ஆயிரத்து 24 கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில் 70 ஆயிரத்து 679 கிலோ ஏலம் போனது. இது 74 சதவிகிதம் ஆகும். இதில் 30 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.93.12க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.89.70க்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.3.42 விலை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 547 கிலோ தேயிலை தூள் மற்றும் இலை ரக தேயிலை ஆகியவை ரூ.2 கோடியே 53 லட்சத்து 83 ஆயிரத்து 40க்கு ஏலம் போனது.