tamilnadu

img

செல்லாத நோட்டுகளை வைத்திருந்த மூதாட்டிகளுக்கு உதவித் தொகை

திருப்பூர், நவ. 29- பணமதிப்பிழப்பு தெரியாமல் செல் லாத ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு மாதாந் திர முதியோர் உதவித்தொகை பெறுவ தற்கான ஆணையினை மாவட்ட  ஆட் சியர் வழங்கினார்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டம், பூமலூர் கருப்பராயன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர்கள் பழனி சாமி மனைவி தங்கம்மாள் மற்றும் காளி முத்து மனைவி ரங்கம்மாள். இவர் கள் இருவரும் வயது முதிர்வில் பிள்ளை களை சார்ந்திருக்க கூடாது எனும் நோக்கத்தில், தங்களது வருங்கால மருத்துவ செலவிற்காக வீட்டில் சுமார் ரூ.46 ஆயிரம் பணம் 500 ரூபாய் நோட்டுகளாக சேமித்து வைத்திருந் தனர்.  இதில் தங்கம்மாள் பழனிசாமி காச நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அங்கு மூதாட்டியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் என தெரிவித் தனர்.  இதனையடுத்து மூதாட்டி, தான் சேமித்து வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தனது மகளி டம் கொடுத்தபோது இந்த நோட் டுக்கள் பழைய செல்லாத நோட்டுக் கள் என்று தெரிவித்ததுடன் அதிர்ச்சிய டைந்தார். இத்தகவல் அருகாமையில் வசிக்கும் ரங்கம்மாள் காளிமுத்துவுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தான் சேமித்து வைத்திருக்கும் பண மும் செல்லாத நோட்டுக்கள் என தெரி யவந்தது.  இதனைத்தொடர்ந்து, செல்லாத ரூபாய் நோட்டுக்களை வைத்து என்ன செய்வது என்று குழப்பமடைந்த நிலை யில் பத்திரிகை, தொலைக்காட்சி மற் றும் ஊடகங்களில் இவர்களை பற்றிய செய்தி வெளிவந்தது. இந்நிலை யில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் இவர்களுக்கு முதியோர் உதவித்தொகை உடனடி யாக வழங்குவதற்கு பல்லடம் வட் டாட்சியருக்கு உத்தரவிட்டார். இத னைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யரகத்தில் வெள்ளியன்று முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும்,காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு ஈரோடு மாவட் டம், பெருந்துறை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு பரிந்துரை கடிதத்தி னையும் வழங்கினார்.  இதனைத்தொடர்ந்து, மூதாட் டிகள் வைத்திருந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்றம் செய்வது குறித்து நடவ டிக்கை மேற்கொள்ள மாவட்ட முன் னோடி வங்கி மேலாளருக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.