சேலம், அக்.1- வருவாய்த்துறை கிராம உதவியாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்டம் முழு வதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரு வாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகி லுள்ள திருவேகம்புத்தூர் பகுதியில் வருவாய்த்துறை கிராம உதவியாளராக பணியாற்றி வந்த ராதா கிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு, வீடு திரும்பி வரும் போது ஆக்கிர மிப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், பாதிக்கப்பட்ட ராதா கிருஷ்ணன் குடும்பத்திற்கு உரிய நிதி உதவி மற்றும் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வலியுறுத்தி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பாபு ஆனந்த், வட்ட தலைவர் ஏழுமலை, வட்ட செயலாளர் பாலசுப்பிர மணியம் மற்றும் கிராம உதவியாளர்கள் பலர் பங் கேற்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செந்தில் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மேட்டூர், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த்துறை உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.