tamilnadu

img

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

 கோவை, ஜூலை 20- கோவையில் நான்கு வயது சிறுமிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோ சட் டத்தின் கீழ் சனியன்று கைது செய்யப்பட்டார். கோவை, துடியலூர், அண்ணா காலனி பகுதி யைச் சேர்ந்த தம்பதிக்கு 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையிடம் கடந்த மாதம் 28ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (45) என்பவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துடிய லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜீலை 5 ஆம் தேதி புகார் அளித்தனர்.  இந்த நிலையில், காலதாமதமான புகார் என்ப தால் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரிக்க சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்தனர். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், செல்வ ராஜ் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்தது உறு திப்படுத்தப்பட்டது. பின்னர், செல்வராஜை காவல் துறையினர் கைது செய்து, போக்ஸோ சட்டத் தின்கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;