சென்னை,நவ.15- புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை எஸ்.பிக்களை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே. சண்முகம், உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக் குறிச்சி மாவட்டத்துக்கு தற்போது தனி அதிகாரிகளாக இருந்து வரும் கிரண் குராலா ஆட்சியராக நியமனம் செய் யப்பட்டுள்ளார். அதேபோல் செங்கற்பட்டு ஏ.ஜான் லூயிஸ், திருப்பத்தூருக்கு எம்.பி. சிவன்அருள், ராணிப்பேட்டைக்கு எஸ். திவ்யதர்ஷினி, தென்காசிக்கு ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி விஜய குமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உரு வாக்கப்பட்ட திருப்பத்தூர் மாட்ட எஸ்.பி.யாக நியமிக்கப் பட்டுள்ளார். திருச்சியில், காவல்துறை துணை ஆணைய ராக இருந்த மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சுகுனாசிங் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாகவும், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. யாக கண்ணன் உள்ளிட்ட 14 பேர் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.