அரசு பள்ளிகளில் நேர்மை அங்காடி
கோவை, ஜூலை 5- மாணவர்கள் மனதில் நேர்மை பண்பை விதிக்கும் வண்ணம் கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் நேர்மை அங்காடியை துவங்கி புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களிடம் நேர்மைப் பண்பை ஊட்டும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் நேர்மை அங்காடி தொடங் கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி ஆசிரி யர்கள் தங்கள் நிதியில் இருந்து மாண வர்களுக்குத் தேவையான பென்சில், பேனா, ரப்பர், பேப்பர்கள் ஆகியவற்றை மொத்தமாக வாங்குகின்றனர். உபக ரணங்கள் மீது அவற்றிற்கான விலையை ஒட்டி பள்ளியின் பொதுவான இடத்தில் விற்பனைக்காக வைத்து விடுகின்றனர். இந்த விற்பனையகம் எந்த ஒரு ஆசிரியர் அல்லது மாணவரின் கண்காணிப்பின் கீழும் இயங்காது. இந்த அங்காடியில் இருந்து மாணவர்கள் சுய சேவை அடிப்படையில், தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு கிடைக்கும் வருவாய் மூலம் மீண்டும் உபகரணங்கள் வாங்கி, மீண் டும் அதே இடத்தில் விற்பனைக்காக வைக்கப்படும். இது தான் நேர்மை அங்காடி என்று கூறப்படுகிறது. தங்களைக் கவனிக்க ஒருவரும் இல்லாத போதிலும் தவறு செய்யக்கூடாது என்ற மனப்பான்மையையும், நேர் மைப் பண்பையும் மாணவர்கள் மன தில் விதைக்கும் வண்ணம் இந்தத் திட் டம் துவங்கப்பட்டுள்ளது. கோவை ஒத்தக்கால் மண்டபம் மற்றும் குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதற்கட்டமாக இந்த நேர்மை அங்காடி துவங்கப்பட்டது. இந்த நேர்மை அங்காடிகளை துவக்கி வைத்த முதன்மை கல்வி அலுவலர் முருகன், அங்காடியின் முதல் வாடிக்கையாளராக பொருட்களை வாங்கி மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
பொள்ளாச்சி அருகே பெண் யானை பலி
ஆனைமலை, ஜூலை 5- பொள்ளாச்சி அருகே பருத்தியூர் வனப் பகுதியில் பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி அருகே உள்ள அர்த்தனாரி பாளையம் வனப்பகுதி என்பது யானைகள் நடமாட்டம் அதிக மாகக் காணப்படும் பகுதி ஆகும். இதன் அருகே உள்ள பருத்தியூர் வன சுற்றுப் பகுதியில் வியாழனன்று வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர் சபரிநாதன் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பாறையின் அருகில் துர்நாற்றம் வீசியதைக் கண்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, இறந்து கிடந்தது என வனத்துறை யினருக்கு தெரியவந்தது. மேலும் ஆய்வு செய்தபோது அருகில் உள்ள பாறை யின் மேல் பகுதியில் இருந்து யானை குட்டி ஈனும் முயற்சியில், கால் தவறி பாறை யில் இருந்து உருண்டு விழுந்துள்ளது. இதில் யானையும், அதன் வயிற்றில் இருந்த குட்டியும் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உதவி கால்நடை மருத்துவர் மற்றும் வனச்சரகர் காசிலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த யானையின் உடல் வன விலங்குகளுக்கு இறையாக வனப்பகு தியிலேயே விடப்பட்டது என வனத் துறையினர் தெரிவித்தனர்.