tamilnadu

img

அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., திறந்து வைப்பு

கோவை, அக். 12 –  சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்துவைத்தார். ஏழை, எளிய மாணவர்கள் அரசு தேர்வுகளை எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெற உதவிடும் வகையில் டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையத்தை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கி ணைத்து நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை சூலூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை ஒன்றியம், வடவள்ளியில் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையத்தை ஞாயி றன்று கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.  

என்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டி.ரவிச் சந்திரன் வரவேற்று உரையாற்றி னார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைப் பொதுசெயலா ளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செய லாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, சூலூர் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம், பயிற்சி மையத்தின் ஆசிரியர் எஸ்.முத்துராமலிங்கம், வாலிபர் சங்க சூலூர் தாலுகா செயலா ளர் வி.பாலகிருஷ்ணன், மாணவர் சங்க தலைவர் எஸ்.சஞ்சய்பிரதாப் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர் கள் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.