திருப்பூர், ஆக. 27 - அமராவதி சர்க்கரை ஆலை குளறுபடிகளால் விவசாயிகள் அடுத்த ஆண்டு கரும்பு அரவைக்கு பதிவு செய்ய மாட்டார்கள் என்று திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் பங் கேற்ற விவசாயிகள் மேலும் பேசு கையில், மடத்துக்குளம் அருகில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் அடிக்கடி இடையூறு செய்யப் பட்டு மொத்தம் 500 டன் கரும்பு அரவை செய்வதற்குப் பதிலாக, 250 டன் மட்டுமே அறவை செய்யப் பட்டுள்ளது. மொத்தம் 3280 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். கள அளவில் ஊழியர்கள் ஊழல், முறைகேடு செய் கின்றனர். கடந்த ஜூன் 21ஆம் தேதி வரை மட்டுமே விவசாயிக ளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள் ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இன்னும் பணம் தரப்படவில்லை. பல்வேறு குளறுபடிகள், களப்பணி யில் ஏராளமான ஊழல் காரணமாக அடுத்த ஆண்டு விவசாயிகள் இங்கு பதிவு செய்ய மாட்டார்கள். ஆலையை மறு சீரமைப்பு செய்ய ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடியும் நின்றுபோனது. எனவே இப்பிரச்ச னையில் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று விவசாயி ஈஸ்வரமூர்த்தி என்பவர் கூறினார். பிஏபி சபை நிர்வாகி கோபால் பேசுகையில், காண்டூர் கால்வாயில் சமீபத்திய மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை விரைந்து சரி செய்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவைத்து, மழை குறைவான, காய்ந்து போன நான்காவது மண்டல பகுதிகளான பல்லடம், பொங்கலூர், காங்கே யம், வெள்ளகோவில் விவசாயிக ளுக்கு தண்ணீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உயர் மின்கோபுரம் அமைக்கும் பிரச்சனையில் விவசாய விளை நிலங்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
அத்துடன் காவல் துறையைச் சேர்ந்த சில ரது நடவடிக்கை சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. நொய்யல் ஆற்றைத் தூய்மைப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் எவ்வ ளவு நிதி ஒதுக்கப்பட்டு, எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து ஆய்வு செய்ய வேண் டும். சிவன்மலை அருகே நொய்யல் ஆற்றுப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார். இதையடுத்து உயர் மின்கோபு ரம் அமைப்பது தொடர்பாக பதில ளித்த ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிராகச் செயல் டுவது எங்கள் நோக்கம் அல்ல. விவ சாய விளைநிலங்களுக்கு வழி காட்டு மதிப்பு, சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு எது அதிகம் இருக்கிறதோ, அதில் இரண்டே முக்கால் மடங்கு இழப்பீடு தருகிறார் கள். அத்துடன் பயிர் பாதிப்புக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தில் வேறு வழியில்லை, விவசாயிகள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றார். வாவி பாளையம் பிரச்சனையில் கோட் டாட்சியர் அங்கு சென்றிருக்கிறார். அங்கு காவல் துறையினர் வரம்பு மீறி நடந்திருந்தால் அது பற்றி விசா ரிப்பார் என ஆட்சியர் பதிலளித் தார். இத்துடன் மாவட்டத்தில் 1550 குளங்கள் உள்ளன. இதில் 800 முதல் 900 குளங்கள் குடிமராமத்து திட்டத்தில் ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது. கிராமங்களில் விருப்பம் இருக்கும் தொழில் துறை யினர், ஆர்வலர்கள் சுத்தம் செய்து கொடுக்க முன்வந்தால் அவர்க ளுக்கு அனுமதி கொடுக்கப்படும். இதை விவசாயிகள் பயன்படுத்தி குளங்களை ஆழப்படுத்துவது, கரை களை பலப்படுத்துவது, சுத்தப் படுத்துவது போன்ற பணிகளைச் செய்து கொள்ளலாம் என்று ஆட்சி யர் கூறினார். மங்கலம் நீரினைப் பயன்படுத் துவோர் சங்கத்தைச் சேர்ந்த பொன் னுசாமி பேசுகையில், வேட்டுவ பாளையம், எம்.செட்டிபாளையம் குளங்களை ஆழப்படுத்தி, வண்டல் மண் எடுக்கவும் அனுமதிக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டார். உடுக்கம்பாளையம் பரமசிவம் பேசுகையில், காண்டூர் கால்வாயில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை 15 நாட்க ளில் நிறைவேற்றியுள்ளது பாராட் டத்தக்கது என்றார். மேலும்,மின் வாரியத்தில் தேவையான ஆட்கள், உபகரணங்கள் வழங்கி நிலுவை விண்ணப்பங்களுக்குத் துரிதமாக இணைப்பு வழங்க வேண்டும். சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், வாழவாடி குளங்கள் தூர்வார அனு மதி வழங்க வேண்டும் என்றும் பரமசிவம் கேட்டுக் கொண்டார்.