tamilnadu

img

அனைத்து இன்ஜினியரிங் தொழிற்சாலைகளையும் இயக்க அனுமதித்திடுக சிஐடியு இன்ஜினியரிங் சங்கம் வலியுறுத்தல்

கோவை, மே 12 -  அனைத்து இன்ஜினியரிங் தொழிற்சாலைகளையும் இயக்குவ தற்கு அனுமதிக்க வேண்டும் என சிஐடியு இன்ஜினியரிங் சங்கத்தின் நிர்வாகிகள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். இதுகுறித்து கோவை டிஸ்ட்ரிக் ஜெனரல் இன்ஜினியரிங் & மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ் யூனி யன் தலைவர் வி்.பெருமாள், பொது செயலாளர் சி.துரைசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கு.ரா சாமணியிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது,  கோவை மாவட்டம் என்பது தமிழ கத்தின் தொழில் நகரங்களில் ஒன்றா கும். அதுவும் குறிப்பாக பெரிய, நடுத் தர, சிறு, குறு மற்றும் பவுண்டரிகள் என இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகின்றன. இதில் நிரந்தர தொழிலாளர்கள்,  அப்ரண்டீஸ், ட்ரய்னி, கேசுவல், காண்ட்ரெக்ட் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவு களில் லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய, மாநில அரசு கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க, கடந்த மார்ச்  24  ஆம் தேதி ஊரடங்கை அறிவித்து, அதை மூன்றாவது முறையாக மே 17  ஆம் தேதி வரை நீட்டித்தது. இந்நி லையில், ஊரடங்கு நடைமுறையில்  உள்ள காலத்திற்கு தொழிலாளர்க ளுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை எந்த நிறுவனங்க ளும் முழு ஊதியத்தை வழங்கவில்லை.   மேலும், ஊதியம் கொடுத்த நிறுவ னங்களும் எப்போது வேண்டுமானா லும் திருப்பி பிடித்தம் செய்யும் வகை யில் முன் பணமாகத்தான் வழங்கப்பட் டுள்ளது. ஆகவே அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்திற்கான அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்ப ளத்தை வழங்க தமிழக அரசும், தொழி லாளர் துறையும் தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் நகரத்தின் பல பகுதி களிலும் சில தளர்வுகள் உண்டாக்கப் பட்டு உற்பத்திக்கான நிறுவனங்கள்  மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட் டுள்ளது.

இதேபோல், சமூக இடை வெளி கடைப்பிடித்து அனைத்து பகுதி யிலும் உள்ள தொழிற்சாலைகள் இயக்க அனுமதித்து தொழிலாளர்கள்  வேலைவாய்ப்பை உத்தரவாதபடுத்த வேண்டுகிறோம்.  மேலும், இப்பணி யில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் வழங்கப்படும் டீ அல்லது காபி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.