tamilnadu

img

விவசாய சங்க தலைவர்கள் சிறையில் அடைப்பு தமிழக அரசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்

தாராபுரம், செப். 25 - விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாய சங்க தலைவர்களை தமிழக அரசு சிறையில் அடைத் துள்ளதை கண்டித்து குண்டடத் தில் தடையை மீறி புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளைநிலங்களில் எந்தவித அனுமதியும் இல்லாமல் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப் படுவதை கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்ட உயர்மின் கோபு ரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலை வர்கள் வழக்கறிஞர் மு.ஈசன், ஆர்.சண்முகசுந்தரம், எஸ்.முத்து விஸ்வநாதன், க.ர.பார்த்தசாரதி, ஆர்.தங்கமுத்து ஆகியோரை கடந்த 13ஆம் தேதியன்று காவல் துறையினர் கைது செய்து கோவை  மத்திய சிறையில் அடைத்துள் ளனர். இதை கண்டித்தும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தலைவர்களை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண் டும். விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட வேண்டும் என வலியு றுத்தி தாராபுரத்தை அடுத்த குண் டடத்தில் உயர்மின் கோபுரங்க ளுக்கு எதிரான விவசாய சங்கங் களின் கூட்டியக்கம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  குண்டடம் வடுகநாத சுவாமி கோயில் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ஏ.எம்.முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வெ.பொன்னை யன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  (சிபிஐ) நிர்வாகிகள் பொன்னுச் சாமி, வி.பி.குணசேகரன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொங்க லூர் ஒன்றிய செயலாளர் எஸ்.துரைசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் முத்துசாமி, பால்ராஜ், ராசு, பச்சை யப்பன், முத்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள், சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராம மூர்த்தி, திருப்பூர் மாவட்ட செய லாளர் ஆர்.குமார், தாராபுரம் தாலுகா செயலாளர் ஆர்.வெங் கட்ராமன், தாராபுரம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயலாளர் என்.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 25ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு  அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் திடீரென செவ்வாயன்று அனுமதி மறுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடப்போவதாக கூட்டியக்கத்தினர் தெரிவித்தனர். இதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தாரா புரம் காவல் துணை கண்காணிப் பாளர் ஜெயராம் தலைமையி லான காவல்துறையினர் கைது  செய்தனர்.