tamilnadu

img

இன்று அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி ஏற்பு

சென்னை,ஜன.25- குடியரசுத் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் தமிழகம் முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை, தி.நகரில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார். ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி, தேச ஒற்றுமையை பாதுகாக்கும் பொருட்டு,  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 26 அன்று  நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதுபோல் தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னையில், தி. நகரில் நடைபெறும் உறுதிமொழி ஏற்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சி ஊழியர்களும் பொதுமக்களும் உறுதி ஏற்கவுள்ளனர்.

;