tamilnadu

img

கொத்தடிமையாய் நடத்தப்படும் பழங்குடி பெண்கள் கோவை கேசிஆர் மில் நிர்வாகத்தின் மீது புகார்

கோவை, மே 12 -  சோமனூரில் உள்ள கேசிஆர் மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி பெண்கள் மீது வேலைப் பளுவை திணித்து நெருக்கடி ஏற்ப டுத்துவதாக ஏஐடியுசி அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.தாமோதரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், சோமனூரில்  கேசிஆர் டெக்ஸ்டைல் நிறுவனம் செயல் படுகிறது. இதில்  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு காலத்திலும் பழங்குடி பெண்களை 16 மணி நேரம் வரை அனைவரும் பஞ்சாலைக் குள்ளேயே தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டுள்ளனர். மேலும், மில் நிர்வாகம் ஊதியத்தை தர மறுத்து வரும் நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம் என்கிற விருப்பத்தையும் ஏற்க மறுக்கிறது. இப் ப்படியான தொழிலாளர் விரோத நட வடிக்கையில் ஈடுபடும் கேசிஆர் மில் லில் ஆய்வு செய்து  நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

;