சின்னார்பதி மலைகிராமத்தில் மருத்துவ முகாம்
பொள்ளாச்சி, அக். 30- பொள்ளாச்சியை அடுத்த சின்னார்பதி மலைக் கிராமத்தில் மலைவாழ் மக்கள் கடுமையாக காய்ச்சலால் பாதிப்பிற்குள்ளாகி வந்த நிலையில் புதனன்று சிறப்பு மருத்துவ முகாம் மூலம் சிசிக்சை அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்துள்ளது சின் னார்பதி மலைக்கிராமம். இப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின் றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியில் சில ருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. ஆனால், இப்பகுதி யில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மலைவாழ் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்த னர். இதுதொடர்பாக அப்பகுதி யைச் சேர்ந்த பழங்குடியின மக் கள் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி கள் செவ்வாயன்று ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்ச லத்தை தொடர்பு கொண்டு தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து புத னன்று நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம் மருத்துக் குழுவினர் சின் னார்பதி மலைக் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு வீடு, வீடாக சென்று மலைவாழ் மக்க ளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியிலும் அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனை மருத்துவ குழுவின் மூலமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த மாதிரிகள் மற்றும் இதர பரிசோதனைகளும் மேற் கொள்ளப்பட்டது. மேலும், பொள் ளாச்சி அரசு மருத்துவமனை சென்று இதர சிகிச்சைகள் பெற் றுக்கொள்ளவும் மலைவாழ் மக்க ளுக்கு ஆலோசனைகள் வழங்கப் பட்டது. முன்னதாக, இம்முகா மினை பொள்ளாச்சி வனச் சரகர் காசிலிங்கம் மற்றும் ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் மேற்பார்வையிட்ட னர்.