tamilnadu

img

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

சேலம், ஆக. 28- சேலம் உருக்காலையை தனி யாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் சேலம் உருக் காலை தொழிலாளர்கள்  ஈடுபட்டு வரும் நிலையில், சிஐடியு மற்றும் வாலிபர் சங்க தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த னர். மத்திய பாஜக அரசு சேலம் உருக்காலையை தனியார்மயப் படுத்தி விற்பனை செய்ய முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு படியாக உலக அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.  இதனை எதிர்த்து சேலம் உருக் காலை தொழிலாளர்கள் கடந்த 5 ஆம் தேதி முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த  நிலையில், தற்போது ஆலைக்குள்  கார்ப்பரேட்கள் நுழையாத வண் ணம் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் 24 மணி நேரமும் காத் திருப்பு போராட்டத்தை நடத்தி புதிய நபர்களை ஆலைக்குள் அனு மதிக்காமல் தடுத்து வருகின்றனர்.  இந்நிலையில்,  சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்கார வேலு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார் ஆகியோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங் கேற்றுள்ள சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந் நிகழ்வில் சேலம் உருக்காலை சிஐ டியு தொழிற்சங்க செயலாளர் சுரேஷ்குமார், சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.