tamilnadu

img

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்கிடுக - சிஐடியு தர்ணா

உதகை செப்.9- தோட்டத் தொழிலாளர்களுக்கு தினகூலியாக ரூ.600 வழங்கிட வலியுறுத்தி உதகையில் சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் பணிபுரி யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். ஆஷா ஊழியர்களுக்கு 6 மாத காலம் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங் களன்று உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். தர்ணா போராட் டத்தை மாநில செயலாளர் சி.கோபி குமார் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ், ஜே.ஆல் தொரை, ரமேஷ்,  சண்முகம், மலர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாயி சங்க நிர்வாகி அலியார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளார் அடையாள குட்டன், அரசு அனைத் துத் துறை ஓய்வூதியர் சங்க நிர் வாகி ராமன் குட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி நிறைவு செய்து பேசினார். நிர் வாகிகள் நவீன் சந்திரன், எம்.ஆர். சுரேஷ், முகமது ரபிக், சீதா உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.