tamilnadu

img

கோவில் கும்பாபிஷேக விழாவில் உணவு சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி மயக்கம்

நாமக்கல், ஜூலை 21- குமாரபாளையம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் உணவு சாப் பிட்ட 60க்கும்  மேற்பட்டோருக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டு குமார பாளையம் அரசு மருத்துவமனை யில்  சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட் டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அருகே உள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து எதிர்மேடு பகுதியில் சனியன்று சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்களுக்கு இரவு புளி சோறு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட அப்பகுதி மக்கள் 60 பேருக்கு திடீரென்று வாந்தி மயக் கம் ஏற்பட்டது.  இதில் ஒரு சிலருக்கு மிகுந்த வயிற்றுப்போக்கும் ஏற் பட்டது. இதனையடுத்து ஞாயிறன்று அதிகாலை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், இப் பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரி கள்  முகாமிட்டு  பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் பட்ட புளிசோற்றில் பள்ளி அல்லது ஏதாவது விஷம் கலந்து இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின் றனர். முன்னதாக, அமைச்சர் தங்க மணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். கோவில் கும்பாபிஷேக விழா பக் தர்களுக்கு அளிக்கப்பட்ட உண வால் பொதுமக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.