tamilnadu

img

பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி சேவை உரிமத்தை உடனே வழங்குக! டிஓடி-பிஎஸ்என்எல் ஓய்வூதியர் மாநாடு வலியுறுத்தல்

கோவை, ஜூன் 30– இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4 ஜி சேவை உரிமத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. அகில இந்திய டிஓடி- பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மாநாடு கோவையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருநாட்கள் மாநில தலைவர் மாணிக்க மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் நரசிம்மன் முன்வைத்த அறிக்கை யின் மீது பிரதிநிதிகள் விவாதித்தனர்.  இம்மாநாட்டில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் களுக்கு 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்ற மும், பணியில் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர் களுக்கு ஊதிய மாற்றமும் வழங்கப்பட வேண்டும். தபால், தொலைத் தொடர்புத் துறை, வங்கி, எல்ஐசி, ரயில்வே உள்ளிட்ட  பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பி லான நிலங்களை பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.  கோவையில் குடிநீர் விநியோகத்தை சூயஸ் போன்ற பன்னாட்டு தனியார் நிறுவனங்களி டம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 5 மாத ஊதிய பாக்கியை உட னடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக சி.கே.நரசிம்மன், செயலாளராக என்.குப்புசாமி, பொருளாளராக எஸ்.நடராஜா உள்ளிட்ட 25 மாநில நிர்வாகிகள் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.