tamilnadu

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

கோவை, ஆக. 23- கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனி யார் சுயநிதிப் பள்ளிகளில், எல்கேஜி அல்லது முதல் வகுப் பில் 25 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, குழந்தைக ளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட் டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற, தனியார் சுய நிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவ டைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பு களில் குறைந்தபட்ச இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை  வழங்கப்பட வேண்டும்.

2020-21 ஆம் கல்வியாண்டிற் கான கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனி யார் சுயநிதிப் பள்ளிகளில், எது நுழைவு நிலையோ (எல்கேஜி அல்லது முதல் வகுப்பு) அந்த வகுப்பில் 25 சத விகித ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணை யதளத்தில்ஆக.27 ஆம்தேதி முதல் செப்.27ஆம்தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை கோரும்,  குழந்தைகளின் பெற் றோர், பள்ளிக் கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்றஇணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு உடன் தவறாது வழங்க வேண்டும்.

இவ்விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணை யவழியில் பதிவேற்றம் செய் யலாம். பெற்றோர்கள் முதன்மைக் கல்வி அலுவல கம், மாவட்டக் கல்வி அலு வலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும் சேர்க் கைக்கான விண்ணப்பங் களை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம், இவ் வாறு அவர் தெரிவித்துள் ளார்.