tamilnadu

img

பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை

சேலம்,டிச13- சேலத்தில் பிரபல நகைக்கடை அதி பர் வீட்டில் 1.5 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாநகரின் முக்கிய பகுதியான குரங்குசாவடியில் வசித்து வருபவர் ஏஎன் எஸ் நகைகடை உரிமையாளர் ஸ்ரீபாசி யம். இவரது வீட்டில் மர்ம நபர்கள் வியாழ னன்று இரவு உள்ளே புகுந்து வெள்ளி, தங் கம் மற்றும் பிளாட்டின நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். குறிப் பாக, லாக்கரில் வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். மேலும், தப்பி செல்லும் போது இரவு காவலாளியாக பணி யில் இருந்த தங்கவேலு என்பவரை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.  இதுகுறித்து, வீட்டின் உரிமை யாளர் அளித்த தகவலின் பேரில் சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த சூர மங்கலம் போலீசார் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற் கொண்டனர். இதன்பின் தடயவியல் நிபு ணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் பட்டு தடயங்கள் பதிவு செய்யப் பட்டன. கொள்ளைச் சம்பவத்தில் ஈடு பட்ட மர்ம நபர்கள்  சம்பந்தப்பட்ட அறை முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.  இதேபோல் கொள்ளை அடித்தவர்கள் வீட்டில் இருந்த அலராம் மற்றும் சிசிடிவி கேமரா வயர்களை துண்டித்து விட்டு கொள்ளை அடித்துள்ளனர்.சேலம் மாநக ரத்தில் அதிக அளவிலான நகைகொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்ப டுத்தியுள்ளது.  இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில் கூறும் போது, வீட்டின் உரிமையாளர் இருக் கும்போதே இந்த கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. லாக்கரில் இருந்த நகை களை கொள்ளையடிக்க லாக்கரை உடைக் காமல் அதன் சாவியை கொண்டே திறந்து கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது விசார ணையில் தெரியவந்துள்ளது. தற்போது கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள தாகவும்,கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் பதிவாகி உள்ளதால் அதன் அடிப்படையில் கொள்ளையர் களை தேடி வருவதாகவும் தெரி வித்தார்.