tamilnadu

img

இலங்கையில் சடலங்களைப் புதைக்கத் தடை... கிறிஸ்தவர்கள் போராட்டம் 

கொழும்பு 
தெற்காசியப் பகுதியில் உள்ள குட்டி நாடான இலங்கையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இதுவரை 214 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பலியாகியுள்ளனர். 

கொரோனவை கட்டுப்படுத்த இலங்கையில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு  சட்டம் ஒன்று கொண்டு வந்துள்ளது. அதாவது இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதைத் தவிர்த்து  எரியூட்ட வேண்டும் எனவும் இந்த புதிய விதிமுறையைக்  கட்டாயமாக்கத் தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய சட்டத்தை எதிர்த்து கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;