வாஷிங்டன், மே 6- அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த வர் டாக்டர் பிங் லியூ (37) கொரோனா தொடர் பான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலை யில், அவர் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகமும் காவல்துறையும் தெரிவித்துள்ளது.
டாக்டர் பிங் லியூ சனிக்கிழமை பிற்பகல் ரோஸ் டவுன்ஷிப்பில் வீட்டில் தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கொல்லப்பட்டபோது அவரது மனைவி வீட்டில் இல்லை. இவர்களுக்கு குழந்தைகளும் இல்லை என பிட்ஸ்பர்க் போஸ்ட் கெஜட் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட லியூ, சிங்கப்பூர் தேசிய பல்க லைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் பி.எச்.டி பெற்றார், பின்னர் பிட்ஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை மேற்கொண்டார். லியூ, கொரோனாவுக்கான செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்து கொள்ள அவர் ஆய்வு செய்து வந்தார்.
லியூ மரணம் குறித்து ரோஸ் காவல்துறை கூறுகையில், லியூவை வீட்டில் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் அவரது காரில் இறந்து கிடந்துள்ளார். லியூவை கொன்ற அந்த நபர் தனது காருக்கு திரும்பி வந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றனர். லியூ கொல்லப்பட்ட அதே நேரத்தில், 46 வயதான ஹாவோகு என்ற யுபிஎம்சி ஆராய்ச்சியாளர், பென்சில்வேனியாவின் ரோஸ் டவுன்ஷிப்பில் உள்ள லியுவின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்குள் காயமடைந்து இறந்து கிடந்துள்ளார். ஹாவேகுவும் டாக்டர் பிங் லியூ-வும் நண்பர்கள் அப்படியிருக்கையில் அவர்களிருவரும் எப்படி இறந்திருப்பார்கள் எனவும் காவல்துறை சந்தேகிக்கிறது.