tamilnadu

img

எர்ணாகுளத்தின் கடைசி கொரோனா நோயாளி

அமைச்சருக்கு நன்றி கூறி விடைபெற்றார்

கொச்சி, மே. 2- எர்ணாகுளம் மாவட்டத்தின் கடைசி   கொரோனா  நோயாளி சனியன்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து மருத்துவமனையிலிருந்து விடைபெற்றார். மார்ச் 22 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு வந்தவர் கலூரைச் சேர்ந்த விஷ்ணு (23). எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரியில் ஏப்ரல் 4ல் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடைசியாக இவருக்கு நடத்தப்பட்ட 15 மற்றும் 16ஆவது மாதிரிகளில் நோய் இல்லை என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து இவர் வெள்ளியன்று மருத்துவர்களுக்கும் செவிலியர் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.  இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார்.

கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து தற்போது எர்ணாகுளம் மாவட்டத்தில் கொரோனா  நோயாளிகள் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. 
 

;