tamilnadu

தங்க கடத்தல் வழக்கில் மீண்டும் தலையீடு: சுங்கத்துறை இணை ஆணையர் இடமாற்றம்

கொச்சி, ஜுலை 30- தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு விசாரணையில் பொறுப்பு வகித்துவந்த கொச்சி சுங்கத்துறை இணை ஆணையர் அனீஸ் பி ராஜன் அதிரடியாக நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அனீஸ், தூத ரக பார்சல் மூலம் தங்கம் கள்ளக்கடத்தலை பிடித்ததில் முக்கிய பங்கு வகித்தார். இந்த வழக்கில் குற்றவாளி களை மிக விரைவாக பிடிக்கவும், ஐக்கிய அரபு அமீர கம் வரை விசாரணையை கொண்டு செல்லவும் அனீ ஸால் சாத்தியமானது. விசாரணையின் ஒரு கட்டத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் அனீஸுக்கு எதிராக பகிரங்கமாக களமிறங்கினர். அதன் தொடர்ச்சியாக இப்போது அவர் இடம் மாற்றப்பட்டுள்ளார்.  தங்க கடத்தல் பிடிபட்டபோது கேரள முதல்வர் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் சுங்கத் துறையை தொடர்பு கொண்டதாக பாஜக மாநில தலை வர் கே.சுரேந்திரன் பழிசுமத்தினார். ஆனால் அவ் வாறு எந்த அழைப்பும் வரவில்லை என செய்தியா ளர்களின் கேள்விக்கு இணை ஆணையர் அனீஸ் பி.ராஜன் பதிலளித்தார். இதற்காக அனீஸ் மீது நட வடிக்கை வரும் என பகிரங்கமாக கே.சுரேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
ஹரிராஜிடம் விசாரணை
பிஎம்எஸ் தலைவர் ஹரிராஜ் வியாழனன்று விசா ரிக்கப்பட உள்ள நிலையில் உடனடியாக அனீஸின் இட மாற்றல் உத்தரவு அமலுக்கு வருவதாகவும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி நாக்பூரில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவரது இடம் மாறுதலில் தெரிவிக்கப்பட்டுள் ளது. ஏற்கனவே கூட்டான இடமாற்றம் விவாதத்தை எழுப்பியதை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தங்க கடத்தல் வழக்கை திசை திருப்பு வதற்கான மத்திய அரசின் மற்றுமொரு நடவடிக்கை யாகவும் இது கருதப்படுகிறது.