tamilnadu

img

மாற்றுத்திறனாளி வழங்கிய நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி விஜயன்

கேரளா மாநிலம் சமீபத்தில் இருமுறை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க அறைகூவல் விடுக்கப்பட்டது. 
இந்நிலையில் கேரளமுதல்வர் பினராயி விஜயனை இன்று காலை மாற்றுத்திறனாளி பிரணவ் என்ற இளைஞர் சந்தித்து நிதியுதவி அளித்தார். இதுகுறித்த முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. 
 "இன்று காலை ஆலத்தூரைச் சேர்ந்த பெயின்டர் பிரணவ் என்னைச் சந்தித்தார். அது இதயத்தைத் தொடும் சந்திப்பு. எனது அலுவலகத்தில் என்னைச் சந்தித்த பிரணவ், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பைக் கொடுத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு கேரள அரசு நல்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்'' எனப் பதிவிட்டுள்ளார். கூடவே பிரணவ் உடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயனுடன் பிரணவ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.