கொச்சி, மே 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் முன்னாள் கேரள முதல்வரு மான இ.கே.நாயனார் நினைவு தினத்தில் அவரது குடும்பத்தினர் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50,001 வழங்கினர். கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜீவ், மாவட்ட செயலாளர் சி.என்.மோகனன் ஆகியோர் நிதியை பெற்றுக்கொண்டனர். நாயனாரின் மனைவி சாரதா டீச்சர், மகள் உஷா, மகன் வினோத், வினோத்தின் மனைவி தன்யா ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து கொச்சியில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து இத்தொகையை பெற்றுக் கொண்டனர்.