tamilnadu

img

தங்கக் கடத்தலில் விசாரணை நடக்கட்டும்... தீர்ப்பு இப்போதே எழுத வேண்டாம்: ஆளுநர்

திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பானவிசாரணை திறம்பட நடந்து வருகிறது, அதற்குள் தீர்ப்பு எழுத வேண்டாம் எனகேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். அமைச்சர் கே.டி.ஜலீல் என்ஐஏ யிடம் சாட்சியம் அளித்தது தொடர்பான ஊடகத்தினரின் கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் மேலும் கூறியதாவது: என்ஐஏ ஒரு திறமையான விசாரணை நிறுவனம். விசாரணையின் கண்டுபிடிப்புகளுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். தேசிய முகமைகள்இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.அவர்களை நம்புங்கள். சட்டம் எல்லோரையும்விட மேலானது.இவ்வாறு அவர் கூறினார்.

;