tamilnadu

img

கேரளாவில் காங்கிரஸை வழிநடத்துவது ராகுல் அல்லது நட்டாவா?

கேரளாவில் காங்கிரஸை வழிநடத்துவது ராகுல் காந்தியா அல்லது ஜே.பி.நட்டாவா என்றும் கொடியேரி கேள்வி எழுப்பினார். தேசிய அரசியலில் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் ஒரு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. கேரளாவில் காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாட்டை அவர் ஆதரிக்கவில்லை. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் அரசியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக ராகுல்காந்தி பகிரங்கமாக பதிலளித்தார். கேரளாவின் கோவிட் பாதுகாப்பு முன்மாதிரியாக இருந்தது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இதன் பின்னர், கேரளாவில் காங்கிரஸ், பாஜகஅணுகுமுறை ஒன்றே எனவும், ராகுல் காந்தியின் வருகைக்குப் பின்னர் அது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா என்றும் பாஜக தலைவர் எம்.டி.ரமேஷ்கேட்டார். இதையொட்டி ராகுல் காந்தியின் நிலைப்பாட்டை ரமேஷ் சென்னித்தலா பகிரங்கமாக நிராகரித்தார். அதுதான் பாஜகவின் கோரிக்கை. கேரளாவில் காங்கிரஸ்-பாஜக கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு இதுவே மிகத் தெளிவான சான்று என்றும் கொடியேரி கூறினார்.

டைட்டானியம் ஊழல் குறித்து சிபிஐவிசாரணை நடத்தவில்லை என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. காங்கிரஸ்-முஸ்லீம் லீக் வழக்கை விசாரிக்க சிபிஐதயாராக இல்லை. இது அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளை தனது சொந்த விருப்பப்படி பயன்படுத்துகிறது என்பதற்கு டைட்டானியம் வழக்கு நல்லசான்று என்று அவர் கூறினார். ஒரு வருடம்கழித்து, இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உம்மன் சாண்டி, ரமேஷ்சென்னித்தலா, இப்ராஹிம் குஞ்ஞி. அவர்களை விசாரிக்க சிபிஐ தயாராக இல்லை. மராட் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. விசாரணைக்கு ஒருவரை அழைத்த பிறகு, மேலதிக நடவடிக்கை எதுவும் இல்லை” என்றும் கொடியேரி கூறினார்.