tamilnadu

img

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நான்கரை ஆண்டுகளில் ரூ.54,245.18 கோடி வழங்கியது எல்டிஎப் அரசு

திருவனந்தபுரம்;
வளர்ச்சியையும் நலனையும் முன்னிறுத்தி கேரளத்தில் எல்டிஎப் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.54,245 கோடியை வழங்கியுள்ளது. இது கேரள வரலாற்றில் மிக உயர்ந்த தொகை. இதில் `33,758.5 கோடி என்பது உள்ளாட்சி அமைப்புகளின் முதுகெலும்பு மேம்பாட்டு நிதியாகும்.

கேரள அரசு தனது பட்ஜெட்டில், வளர்ச்சி நிதியை 25 சதவிகிதமாக உயர்த்தியது. நிதி அதிகரிப்புடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு லைப், சுபிக்ஷா கேரளா மற்றும் பிற 12 திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. யுடிஎப் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற உற்பத்தித் துறைக்கான ஒதுக்கீட்டையும் எல்.டி.எப் அரசாங்கம் மீண்டும் நிலைநிறுத்தியது. யுடிஎப் அரசு ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.23,729.02 கோடியை செலுத்தியது. இதில், வளர்ச்சி நிதி ரூ.19,778 கோடி மட்டுமே.

எல்.டி.எப் அரசு 2016-17 முதல் இந்தாண்டு வரை வளர்ச்சி நிதியாக ரூ.26,227.50 கோடியை வழங்கியது. நடப்பு நிதியாண்டில் ரூ.7531 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளன. இதற்காக வளர்ச்சி நிதி செலவிடப்படும் முறையை அரசாங்கம் மாற்றியுள்ளது. கிராமம், ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துகள் பொதுத்துறையில் பொது பங்கில் 30 சதவிகிதத்தையும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10 சதவிகிதத்தையும் உற்பத்தித் துறை திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி உட்கூறு திட்ட நிதியில் 5 சதவிகிதமும், பொதுப் பிரிவில் பொதுப் பங்கும் மாற்றுத்திற னாளிகள், முதியோருக்கு ஐந்து சதவிகிதமும், நோய்த்தடுப்பு சிகிச்சை திட்டங்கள், பெண்கள் உட்கூறு திட்டத்திற்கு பத்து சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். இந்த மாற்றம்சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவியுள்ளது.