ஆலப்புழா, ஆக.17- மழைக்காலங்களில் வெள்ளம் தேங்கி வீடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு மிதக்கும் குட்டநாட்டில் ரீபில்டு கேரளா-கேர்ஹோம் திட்டத்தில் உயரமாக தூண்கள் அமைத்து கட்டப்பட்ட வீடுகள் இம்முறை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்டன. “கடந்த பெருவெள்ளத்தின் போது வீடுகள் மூழ்கி விட்டன. இம்முறை வெள்ளப்பெருக்கு இருந்த போதிலும் சிரமம் ஏற்படவில்லை. தூண்களால் உயரத்தில் கட்டப்பட்ட வீடு களை வெள்ளத்தால் தொடமுடியவில்லை. ரீபில்டு கேரளத்தின் பகுதியாக கட்டப்பட்ட வீட்டில் நாங்கள் ஏழு மாதங்களாக குடியி ருக்கிறோம். அரசு வழங்கிய ரூ.4 லட்சம் பேரு தவியாக இருந்தது” என்கிறார் கிழக்கு கைன கரியைச் சேர்ந்த சிந்து சந்திரானந்தன். இது சிந்துவின் வார்த்தைகள் மட்டுமல்ல. குட்ட நாட்டின் கைனகரியில் உள்ள அனைவரும் இப்படித் தான் கூறுகிறார்கள். ரீபில்டு கேரளாவில் குட்டநாடு பகுதியில் பெருவெள்ளத்தை தாங்கும் வலுவுடன் 1826 வீடுகள் கட்டப்படுகின்றன. அரசு வழங்கும் ரூ.4 லட்சத்தின் உதவியுடன் பயனாளிகள் தங்கள் சொந்த நிதியையும் சேர்த்து 1751 வீடுகளும் கூட்டுறவுத் துறையின் கேர் ஹோம் திட்டத்தில் 75 வீடுகளும் கட்டப்படுகின்றன. இதில் 736 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கான கட்டுமானப் பணி கள் நடைபெற்று வருகின்றன. கைனகரி, வெளியநாடு, காவாலம், புளிக்குந்நு ஆகிய பஞ்சாயத்துகளில் இந்த வீடுகள் கட்டப்படு கின்றன. நிலத்திலிருந்து ஒன்று முதல் இரண்டு மீட்டர்கள் வரை தூண்கள் எழுப்பி மண்ணிட்டு நிரப்பி அதற்கு மேல் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.