திருவனந்தபுரம்:
கேரளத்தில் மழை குறைந்ததால் வெள்ளப் பெருக்கும் அதனால் ஏற்பட்டஅச்சமும் விலகியுள்ளது. மீட்பு பணிகளை மேற் கொள்ள சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளும் செய்திட வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். திங்களன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த காணொலி காட்சி உரை யாடலின்போது முதல்வர் கூறியதாவது: வீடுகளை இழந்தவர்களுக்கு முகாம்கள் மூடப்பட்டாலும் அவர்கள் தங்குவதற்கான வசதிகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும். அத்தகைய முகாம்களுக்கான இடம் உடனடியாக கண்டறி யப்பட வேண்டும். பிரச்சனை ஏற்பட்ட மின் இணைப்புகள்தகர்ந்த சாலைகள் உடனடி யாக சீரமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து, குடிநீர் விநியோகம் போன்ற
வை உடனடியாக சீராக்கப் பட வேண்டும். அதுவரை நல்ல நீர் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மண் சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள வர்களை அங்கிருந்து அகற்றுவது முக்கியமான மீட்பு பணியாகும். வெள்ளம் வடியத்தொடங்கியதால் முகாம்களிலிருந்து பலரும் வீடுகளுக்கு திரும்பத் தொட ங்கியுள்ளதாக ஆட்சியர்கள் தெரிவித்தனர். வயநாடு, மலப்புறம் மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்களை அங்கிருந்து அகற்றியதாக ஆட்சியர்கள் தெரிவித்தனர். போனவர்களை தேடும் பணி யும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.