tamilnadu

img

சபரிமலையில் உச்சநீதிமன்றம் கூறுவதுபோல் செயல்படுவோம்: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், டிச.7- சபரிமலையில் தரிசனம் செய்ய காவல்துறை பாது காப்பு கோரி பிந்து அம்மணி யும் வேறு சிலரும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய் துள்ள மனுவில் உச்சநீதி மன்ற உத்தரவின் அடிப்ப டையில் செயல்படுவோம் என கேரள முதல்வர் பின ராயி விஜயன் தெரிவித்தார். சனியன்று செய்தியா ளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மேலும் அவர் கூறுகையில், இந்த பிரச்ச னையில் அரசு ஏற்கனவே நிலைபாட்டை தெளிவு படுத்தியுள்ளது. இப்போது அவர்கள் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவு வரட்டும் என்றார்.

யுஏபிஏ வழக்கு

கோழிக்கோட்டில் யுஏபிஏ வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்கள் மாவோ யிஸ்ட் தொடர்பு உள்ள வர்கள்தான். இவர்கள் சிபிஎம் ஊழியர்கள் அல்ல. விசாரணையில் இது தெரி யவந்துள்ளது என மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
 

;