tamilnadu

img

கேரளத்தில் பலத்த மழை தொடர்கிறது;  ஐந்து மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்:
கேரளத்தில் பெய்து வரும்  பலத்த மழையால் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் உயரமான அலைகள் எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

;