tamilnadu

img

‘ஜனநாயக மதிப்புகளை கொலை செய்துவிட்டீர்கள்’... ஜேஎன்யு தாக்குதலுக்கு மலையாளத் திரையுலகம் கண்டனம்

திருவனந்தபுரம்:
ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் கிரிமினல் குற்றஎன்றும், ஜனநாயக மதிப்புகளைக் கொலைசெய்யும் செயல் என்றும் மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் கண்டித்துள்ளனர்.“அறிவை- கல்வியைப் போதிக்கும் இடத்துக்குள் புகுந்து சட்டம் ஒழுங்கை பொருட்படுத்தாமல், கட்டற்ற வன்முறையை மாணவர்கள் மீது நடத்தியது அனைத்துஜனநாயக மதிப்புகளையும் கொலை செய்ததாகும். இது கிரிமினல் குற்றம், இதைச் செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள் ளாக்க வேண்டும்” என்று மலையாள நடிகர்பிரித்திவி ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “எந்த சிந்தாந்திற்கு ஆதரவாகஇருக்கிறீர்கள், என்ன காரணத்துக்காகப் போராடுகிறீர்கள், இதனால் என்ன முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ள பிரித்திவி ராஜ்,“வன்முறை, காழ்ப்புணர்ச்சி ஆகியவை ஒருபோதும் எந்த விஷயத்திற்கும் தீர்வாகாது,பதில் அளிக்காது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.“ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது, நான் அதிர்ச்சிஅடைந்துவிட்டேன். தேசத்தின் அறிவாலயமாக ஜேஎன்யு மதிக்கப்படுகிறது. இங்கிருந்து ஏராளமான தலைவர்களும், ஆட்சியாளர்களும் வந்திருக்கிறார்கள். அவர் களின் அரசியல் வேறாக இருக்கலாம், ஆனால், அவர்களின் தேசப்பற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது” என்று நடிகை மஞ்சு வாரியர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

“சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் வெளிஆட்கள் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது. இதை வாய்மூடிப் பார்க்க முடியாது. மாணவர்களுக்காக ஆதரவாக இருப்பது அவசியம்” எனவும் கூறியுள்ளார்.இதேபோல, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், “பெருமைக்குரிய முன்னோடியான பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிலர் கோழைத்தனமாக முகத்தை மூடிக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு எதிராக இங்கிருக்கும்அமைப்பு முறை தோல்வி அடைந்துவிட் டது, இந்த தேசத்தில் ஏதோ தீவிரமாகவும், தவறாகவும் நடக்கிறது.

உங்களுடைய அரசியல் நிலைப்பாடு எதுவாக இருக்கட்டும், ஆனால், இங்கு அனைத்தும் இயல்பாக இருக்கிறது என்று நம்பினால், நீங்கள் ஏதோ மோசமான தவறு செய்கிறீர்கள் என்றே அர்த்தம். தாக்குதல் நடத்திய கோழைகளைப் பிடிக்காமல், தண்டிக்காமல் இருக்கும்வரை இந்த தேசம்தூங்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.இதேபோல, “மாணவர்கள் மீதான தாக்குதல் கொடூரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது” என நடிகர் நிவின் பாலி, “இங்கு என்னநடக்கிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது, இது குழந்தைகளுக்கு எதிரான போர்”என்று நடிகையும் இயக்குநருமான கீதுமோகன்தாஸ் ஆகியோரும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

;