திருவனந்தபுரம், ஜூலை 20- கேரளத்தில் ஞாயிறன்று 821 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்பு மூலம் 621 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் நோய் தொற்றிடம் தெரியாத 43 பேர் உள்ளனர். கோவிட் குறித்து கேரள சுகா தாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது: ஞாயிறன்று நோய் தொற்று ஏற்பட்டதில் 110 பேர் வெளிநாடு களில் இருந்தும், 69 பேர் இதர பிற மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். கண்ணூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த காசர்கோடு உப்பத்தைச் சேர்ந்த நபீசா(75), எர்ணாகுளம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆலப்புழாவைச் சேர்ந்த குஞ்ஞி வீரன் (67) ஆகியோர் உயி ரிழந்தனர். இதோடு கோவிட் மரணம் 42 ஆகஅதிகரித்துள் ளது. 13 சுகாதாரத் துறை ஊழியர்க ளுக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டது. ஞாயிறன்று 172 பேர் குண மடைந்தனர். இதோடு 5373 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 7063 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்க ளில் 1,70,525 பேர் தற்போது கண் காணிப்பில் உள்ளனர். இதில் 1,63,216 பேர் வீடுகள்/ நிறுவனங்க ளிலும் 7309 பேர் மருத்துவமனை களிலும் உள்ளனர். ஞாயிறன்று 866 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஞாயிறன்று காலை வரை யிலான 24 மணி நேரத்தில் 18,267 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப் பப்பட்டன. இதுவரை மொத்தம் 5,32,505 மாதிரிகள் பரிசோத னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 5060 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவின ரின் 96,288 மாதிரிகள் சேகரிக்கப் பட்டதில் 91,566 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஞாயிறன்று 26 கட்டுப்பாட்டு பகுதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டன. 7 பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக் கப்பட்டன. தற்போது கேரளத்தில் 318 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.