tamilnadu

கேரளத்தில் ஒரே நாளில் 927 பேருக்கு கோவிட் தொடர்பு தொற்று 733; குணமடைந்தது 689 பேர்

திருவனந்தபுரம், ஜூலை 27- கேரளத்தில் ஞாயிறன்று ஒரே நாளின் 927 பேருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டது. இதில் தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 733 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்தோர் 76 பேர் இதர மாநிலங்க ளில் இருந்து வந்தோர் 91 பேர். தொற்றிடம் அறியாதோர் 67 பேர், 16 சுகாதார ஊழியர்க ளுக்கு நோய் தொற்று உறுதியானது. நோயி லிருந்து குணமடைந்தோர் 689 பேர். இதுவரை 9,302 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 9.655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் பல்வேறு மாவட் டங்களில் 1,52,162 பேர் கண்காணிப்பில் உள்ள னர். இதில் 1,47,182 பேர் வீடுகள் /நிறுவன கண்காணிப்பிலும், 8980 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். ஞாயிறன்று மட்டும் 1277 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஞாயிறு காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,626 மாதிரிகள் ஆய்வு செய்யப் பட்டன. இதுவரை மொத்தம் 6,72,748 மாதிரி கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 7492 முடிவுகள் நிலுவையில் உள்ளன. சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரிலிருந்து சேகரிக்கப்பட்ட 1,12,714 மாதிரிகளில் 1,09,143 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப் பட்டது. புதிதாக 29 கட்டுப்பாட்டு பகுதிகள் உரு வாயின. 15 பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக் கப்பட்டன. தற்போது மாநிலம் முழுவதும் 494 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.