tamilnadu

அரசு செலவில் கோவிட் பரிசோதனையும், சிகிச்சையும் தனியார் மருத்துவமனைகளுக்கு கேரளத்தில் கட்டணம் நிர்ணயம்

திருவனந்தபுரம், ஜூலை 26- கேரள அரசின் காருண்யா சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் (KASP) கீழ் பதிவு பெற்றுள்ள தனியார் மருத்துவமனை களுக்கு அரசு மருத்துவமனைகளால் பரிந்து ரைக்கப்படும் கோவிட் நோயாளிகளுக்கான கட்டண விவரங்களும் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளதாக கேரள சுகா தாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா வெளியிட்டார்.  காருண்யா சுகாதார பாதுகாப்பு திட்டத் தின் அமலாக்கத்திற்காக அமைக்கப்பட்ட மாநில சுகாதார முகமை (எஸ்எச்ஏ) வெளி யிட்டுள்ள இதற்கான வழிகாட்டுதல்படி படுக்கை வசதி கொண்ட தனியார் மருத்து வமனைகள், திட்டத்தின் பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றன. கோவிட் சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் ஒரே விதமான சிகிச்சை கட்ட ணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார். அரசு மற்றும் தனியார் சுகாதாரத் துறை கள் ஒன்றுபட்டு கோவிட் நோயை எதிர் கொள்ளும். இத்திட்டத்தில் கோவிட் உட்பட எந்த ஒரு சுகாதார பிரச்சனைக்கும் நோயாளி களின் விருப்பத்திற்கு இணங்க சிகிச்சை பெற முடியும்.

ஏற்கனவே 28 தனியார் மருத்து வமனைகள் கோவிட் தொற்றுக்கு உள்ளா னவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தனியார் மருத்துவமனைகளிலும் கோவிட் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக தனியார் துறை யில் பரிசோதனை ஏற்பாடுகளும் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கோவிட் சிகிச்சைக் கான பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களி லும் அரசு, தனியார் துறைகளில் நிறைவ டைந்துள்ளது. சிகிச்சைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் சுகாதாரத் துறையின் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பொதுவான வார்டுக்கு ரூ.2300, எச்டியு ரூ.3300, ஐசியு ரூ.6500, வென்டி லேட்டருடன் கூடிய ஐசியு ரூ.11,500 என ஒருநாள் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேல் பிபிஇ பைகளுக்கான கட்டணமும் வசூலிக்க லாம். ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு ரூ.2700, ஆன்டிஜன் சோதனை ரூ.625, நாட் (Expert) ரூ.3000, நாட் (Step 1) ரூ.1500, ட்ரூ நாட் (Step 2) ரூ.1500 என அரசு கட்ட ணத்தில் பல்வேறு கோவிட் பரிசோதனை களை தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் / தனி யார் ஆய்வகங்களில் செய்து கொள்ள லாம்.    காருண்யா சுகாதார பாதுகாப்பு திட்ட உறுப்பினர்களுக்கு கோவிட் சிகிச்சை செலவு முழுவதும் மாநில சுகாதார முகமை ஏற்றுக் கொள்ளும். திட்டத்தில் உட்படாத அரசு நிறுவனம் பரிந்துரைக்கும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான செலவை கேரள அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும் அமைச்சர் கூறினார்.