tamilnadu

img

சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெற கேரள அரசு முடிவு

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை  திரும்ப பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்படும் வழக்குகளை விசாரிக்க, நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு பொது ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை  திரும்ப பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், கேரள அரசின் அதிகார வரம்புக்கு  உட்பட்ட பகுதிகளுக்குள் இனி விசாரணை நடத்த, அம்மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும்.

மேலும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும், மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.