tamilnadu

இலவச மின்சாரம் சலுகை அல்ல விவசாயிகளின் உரிமை: கே.எஸ்.அழகிரி

சென்னை, மே 18- இலவச மின்சார உரிமையை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசை தமிழக அரசுக்கு கண் டிக்க மனமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- விவசாயிகள், நெசவாளர் கள், குடிசைவாசிகளுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு  நிபந்தனை விதித்திருக்கிறது. பயனாளிகளிடம் மின்கட்ட ணத்தை வசூலித்து அதை மாநில அரசு மானியமாக விவசாயிக ளின் வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்திக்கொள் ளலாம். மத்திய நிதியமைச்சகத்தின் நிபந்த னையை ஏற்றுக் கொள்ள வில்லை எனில் மாநில அரசுக்கான  கடன் வரம்பு குறைக்கப்படும்.

பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தை மாநில அரசை கேட்காமல் மத்திய அரசு மின்சார  சட்டத் திருத்தம் கொண்டு வரு வது மாநில உரிமைகளை பறிக்  கிற முயற்சியாகும். இது கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். இலவச மின்சாரம் என்பது சலுகை அல்ல. அது ஒரு உரிமை.  அதை மத்திய அரசு பறிக்க  முயல்கிறது. அதை தடுத்து நிறுத்துகிற துணிவு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கி றதா? விவசாயிகள், நெசவாளர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தை பாதிக்கிற வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டால் அதை எதிர்த்து தமிழகத்தில் கடு மையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். மத்திய பாஜக அரசின் நிதித்துறை தமிழக அரசுக்கு  அனுப்பியிருக்கிற சுற்றறிக்கையி னால் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாக தமிழக விவ சாயிகள், நெசவாளர் கள் அனுப வித்து வருகிற இலவச மின்சாரத்  திற்கு பேராபத்து ஏற்பட்டிருக் கிறது. இந்த சுற்றறிக்கையின் மூலம்  இலவச மின்சாரத்திற்காக மாநில  அரசு ஒதுக்குகிற மானியம் விவ சாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்தலாம். ஆனால்,  இலவசமாக மின்சாரத்தை வழங்கக் கூடாது. அப்படி  தொடர்ந்து வழங்கப்படுமேயா னால் தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குவதற்காக இருக்கும் சலுகைகள் பெரு மளவில் குறைக்கப்படும் என்று  நிபந்தனைகளை விதித்திருக்கி றது.

அரசமைப்பு சட்டத்தில் எரி சக்தித்துறை என்பது பொதுப் பட்டியலில் இருந்தாலும் மாநில  உரிமைகளை பறிப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த உரிமை யும் இல்லை. பொதுப்பட்டியல் என்பது மத்திய, மாநில அரசு களுக்கு பொதுவானது.

விவசாயிகள், குடிசைவாசி கள், கைத்தறி நெசவாளர்கள் பெற்றுவருகிற இலவச மின்சா ரத்தை ரத்து செய்யும் மத்திய மின்சார சட்டதிருத்தத்தை திரும்ப பெற மத்திய அரசை வலி யுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனி சாமி கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பிறகு தற்போது மத்திய நிதியமைச்சகம் இத்த கைய சுற்றறிக்கையை அனுப்பி யிருக்கிறது. இதன்மூலம் தமி ழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப்படுத்தியி ருக்கிறது. மத்திய அரசிடம் நிதிக்காக கையேந்தி நிற்கும் அதி முக அரசு இத்தகைய அதிகார அத்துமீறலை எதிர்த்து குரல் கொடுக்கும் துணிவு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கி றதா?

ஆற்றுப்பாசனத்தில் விவ சாயிகள் இலவசமாக நீர்ப்பாச னம் பெறுகிற உரிமையை கிணற்றுப்பாசன விவசாயி களுக்கும் வழங்கி சமநிலை தன்மை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதே இலவச  மின்சாரம். எனவே, மத்திய அர சின் முயற்சியை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

;