tamilnadu

குற்ற வழக்குகளின் விவரிப்புகள் ஊடகங்கள் மூலம் வெளிவரக் கூடாது கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு

கொச்சி, ஆக.13-  ஊடக விசாணை கூடாது  எனவும், குற்ற வழக்குகளில் விசாரணை விளக்கங்களும் விவரிப்புகளும் ஊடுகங்கள் மூலமாக வெளியே வரு வதை தடுக்க வேண்டும் என  கேரள உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது. குற்ற வழ க்குகளின் விசாரணை குறித்து விசாரணை அதிகாரி ஊடகங்கள் மூலம் அறி விப்புகளை வெளியிடக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழ க்கம் அதிகரித்து வருகிறது எனவும் நீதிமன்றம் விமர்சி த்தது. விசாரணை அதிகாரி செய்தியாளர் சந்திப்பு நடத்து வதற்கு சட்ட ரீதியான விலக்கு உள்ளது. செய்தி யாளர் சந்திப்புகள் சான்று களை பலவீனப்படுத்தும். காவலில் உள்ள குற்ற வாளிகளை ஊடகங்கள் முன்பு நிறுத்துவதோ, புகை ப்படங்களை வெளியிடுவதோ கூடாது. இதில் காவல்துறை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். இது  தொடர்பாக டிஜிபி சுற்ற றிக்கைகள் வெளியி ட்டுள்ளார் என்றாலும் விசா ரணை அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட கருத்துகளை ஊடகங்களோடு கூறுவதை அனுமதிக்க முடியாது. நீதி மன்றங்கள்தான் வழக்கு களில் தீர்ப்பு எழுத வேண்டும்  எனவும் நீதிபதிகள் ஏ.ஹரி பிரசாத், என்.அனில்குமார் இடம்பெற்ற அமர்வு தெரிவித்துள்ளது. ஹரிஹர வர்மா கொ லையில் விசாரணையின் முன்னேற்றத்தை ஐஜி செ ய்தியாளர்களிடம் விளக்கி னார். அது குற்றவாளிகளை விசாரணைக்கு முன்பே அடையாளம் காண இடம ளித்துவிட்டதாக குற்றவா ளிகள் தரப்பு வாதிட்டது. அதை ஆய்வு செய்த பின்னரே ஊடக விசாரணை கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.