tamilnadu

img

திருப்தி தேசாய் சபரி மலை வருகை பாஜகவின் சதி திட்டம்- அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சாடல்

திருப்தி தேசாய் சபரிமலை  ஐய்யப்பன் கோவில் வருகையில் பாஜகவின் மிகப்பெரிய சதி உள்ளது என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.  
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை கொச்சி விமான நிலையத்திற்கு  திருப்தி தேசாய் தலைமையில்  பெண்கள் வந்தனர். சபரிமலை கோவில் செல்வதற்கு காவல்துறை  பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்தி தேசாய் மனு கொடுத்தார். ஆனால், திருப்தி தேசாய்க்கு பாதுகாப்பு அளிக்க கேரள காவல்துறை மறுத்துவிட்டது. இதனால், தனது திட்டத்தை ரத்து செய்த திருப்தி தேசாய், விமானம் மூலம் புனேவுக்கு திரும்புகிறார்.
இதைத்தொடர்ந்து திருப்தி தேசாய் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:- “ திருப்தி தேசாயும் அவரது குழுவினரும் சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்திருப்பதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது. திருப்தி தேசாய் புனேவில் இருந்து வந்துள்ளார். அவ்விடங்களில் தான் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது” என்றார்.