விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கே.கோபாலகிருஷ்ணன், காவல்துறை கண்காணிப்பாளர் யு அப்துல் கரீம் மற்றும் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 26 அதிகாரிகளும் சோதனை செய்து கொண்டனர். இதில், 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து 48 கி.மீ தொலைவில் உள்ள கோழிக்கோட்டில் உள்ள ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டேபிள்-டாப் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 26 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், சோதனை செய்து கொண்டவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கே.கோபாலகிருஷ்ணன், காவல்துறை கண்காணிப்பாளர் யு அப்துல் கரீம் மற்றும் காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உட்பட 26 அதிகாரிகளும் கொரோனா சோதனை செய்து கொண்டனர்.
ஏற்கனவே, பயணிகளில் ஒருவர் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்ததை பரிசோதனையில் தெரியவந்த நிலையில், தன்னார்வலர்களும் பகுதியில் இருந்த சுகாதார பணியாளர்கள் என அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையப் பகுதியைச் சுற்றி தங்கியுள்ள இளைஞர்கள், பலத்த மழை மற்றும் கொரோனா அச்சங்களைத் துணிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.இதற்கு, முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.