tamilnadu

img

கொரோனா அச்சம்.. கேரளாவின் பத்தனம் திட்டா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தின் தமிழக தென் மேற்கு பகுதி எல்லை மாவட்டமான பத்தனம்திட்டாவின் ரண்ணி பகுதியை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை என்பதால் பெரியளவு பதற்றம் தவிர்க்கப்பட்ட நிலையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாளை தொடங்கவிருந்த 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த மாதம் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. சீனாவின் வூஹானிலிருந்து கேரளம் திரும்பிய மருத்துவ படிப்பு மாணவர்கள் மூவரும் சிகிச்சை பின் வீடு திரும்பிவிட்டனா். நாட்டின் முன்மாதிரியாகத் திகழும் கேரள அரசு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;