திருவனந்தபுரம்:
கேரளத்தில் தொடக்க நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட்அப்) சிறந்தவணிக வாய்ப்பை வழங்குவதற்காக கேரள ஸ்டார்ட் அப் மிஷன் நவம்பர் 2முதல் 6 வரை கார்ப்பரேட் தேவைவாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. நாஸ்காம் தொழில் கூட்டாண்மை திட் டத்தின் (என்ஐபிபி) ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், உலகெங்கிலும் உள்ள ஆறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், பாலபெல்லா, பிஎஸ்ஏ குழுமம், கிரெடிட் சூயிஸ் மற்றும் டாடா ஏஐஏ போன்ற நிறுவனங்கள் மாநிலத்திற்கு வர உள்ளன.
முதல் கட்டத்தில், நிறுவனங்கள் தங்கள் தேவைகளை தொடக்க நிறுவனங்களுடன் நிவர்த்தி செய்யும். கார்ப்பரேட்டுகளின் தேவைகளுக்கு ஏற்ப அல்லது அவற்றை உருவாக்கக் கூடிய தீர்வுகளைக் கண்டறிய ஸ்டார்ட்அப் மிஷன் வடிவமைத்த போர்ட்டல் மூலம் நவம்பர் 22 க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். என்ஐபிபி மற்றும்ஸ்டார்ட் அப் மிஷன் இணைந்து சிறந்ததயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து டிசம்பர் 5 ஆம் தேதிக்கு முன்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும். டிசம்பர் 14 முதல் 19 வரை கேஎஸ்யுஎம் ஏற்பாடுசெய்யும் மெய்நிகர் பிக் டெமோ தினத் திற்கான தொடக்க நிறுவனங்களை கார்ப்பரேட்டுகள் தேர்ந்தெடுக்கும்.கேஎஸ்யுஎம் இன் தனித்துவமான அடையாளத்துடன் கூடிய தொடக்க நிறுவனங்கள் கார்ப்பரேட் தேவைதினத்திற்கு http://bit.ly/ksumcdwஇல் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு https://business.startupmission.in/nasscom. என்கிற இணைய தளத்தை பார்வையிடவும். 9605206061என்கிற எண்ணை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.