திரிச்சூர், ஜுன் 3- இந்திய மாணவர் சங்கத் தைச் சேர்ந்த மாணவர்கள் கட்டடப் பணி செய்து கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி வழங்கி யுள்ளனர். கோவிட் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு வர கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு இந்திய மாணவர் சங்கம் பல்வேறு வகையில் உதவி வருகிறது. இம் முறை கட்டிடம் கட்டுமானப் பணி யில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் வருவாயை மாணவர் சங்கத்தின் புழைக்கல் வட்டாரக்குழுவினர் முதல்வரின் நிவாரண நிதியாக வழங்கினர். வைஷ்ணவம் கட்டுமானப் பணிகள் ஒப்பந்ததாரர் விஷ்ணு விடம் 12 எஸ்எப்ஐ மாணவர்கள் முழு நாள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர். அதில் கிடைத்த தெகையை எஸ்எப்ஐ மாநில செய லாளர் கே.எம்.சச்சின்தேவிடம் வட் டாரச் செயலாளர் ஜிஷ்ணுதேவ் வழங்கினார். இதுபோல் பல் வேறு வகையில் வருவாய் ஈட்டி நிவாரண நிதிக்கு மாணவர்களும் வாலிபர்களும் வழங்கி வருகின்றனர்.
ரீசைக்கிள் கேரளா
இந்திய ஜனநாய வாலிபர் சங் கம் மாநிலம் முழுவதும் ரீசைக் கிள் கேரளம் என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் வீடுகளில் இருந்து பழைய பொருட்களை பெற்று அதில் கிடைக் கும் வருவாயை முதல்வர் நிவா ரண நிதிக்கு கொடுத்து வருகின்ற னர். சுற்றுச் சூழல் மேம்பாட்டுக் கும் பெருமளவுக்கு உதவும் வாலி பர் சங்கத்தின் இந்த முயற்சி சுற் றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு பகுதியினரின் பாராட்டு தலை பெற்றுள்ளது.