ஆலப்புழா:
கேரள அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவாத மத்திய அரசு கேரள அடிப்படைக் கட்டமைப்பு முதலீட்டு வாரியம் (‘கிப்பி’) (Kerala Infrastructure Investment Fund Board) மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க முனைப்புகாட்டி வருகிறது. அதற்கு பிற ஏஜன்சிகளைப் போன்றே,மத்திய கணக்கு தணிக்கை ஆணையத்தை கேரளத்தின் மீது ஏவியுள்ளது.
இது குறித்து கேரள நிதி அமைச்சர்டாக்டர் டி.எம். தாமஸ் ஐசக் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கிப்பி நிறுவனத்தால் பெறப்படும் கடன்கள் பற்றிய அறிக்கையில் அரசியலமைப்பின் 293 (1) வது பிரிவு மீறப்பட்டுள்ளதாக, சிஏஜி கூறுவது சரியல்ல. அதாவது மத்திய அரசின்அனுமதியின்றி கேரள அரசு கடன் வாங்குகிறது என்பதும்,‘மசாலா’ பத்திரங்களை வழங்க மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என்பதும், கிப்பியின் கடன்கள் பட்ஜெட்டில் இல்லை என்று கூறுவதிலும் உண்மை இல்லை. கிப்பியால் மேற் கொள்ளப்படும் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகின்றன.சட்டப்படி தேவைப்படும் பணமும் பட்ஜெட்டில்சேர்க்கப்பட்டுள்ளது.கிப்பியின் கடன்கள் மாநில அரசின்நேரடி பொறுப்பு அல்ல. தற்செயல்(கண்டிஜன்சி)பொறுப்புகள் மட்டுமே. தற்போது, சிஏஜி தணிக்கையின் போது கிப்பிபெற்ற மொத்த கடன்கள் ரூ .3,000 கோடிக்குமேல் உள்ளன. ஆனால் கேரள அரசாங்கம் அதை விட அதிகமாக வரி செலுத்தியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ.2500 கோடி கார்பஸ் நிதியைச் சேர்த்து, பட்ஜெட் ஆவணத்தின்படி ரூ.5871 கோடி கிப்பிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உட்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கான தொடர்ச்சியான திட்டங்களை கிப்பி மேற்கொண்டு வருகிறது.இதற்கு தேவையான பணம் சந்தையில் இருந்து திரட்டப்படுகிறது.இந்த பணத்தை திருப்பிச் செலுத்துவது ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான வரி பங்களிப்பாக மாநில அரசால் கிப்பிக்கு செலுத்தப்படும். இதனால்தான் கிப்பி வருடாந்திர முறையின் நீட்டிப்பு என்று கூறப்படுகிறது. கிப்பியின் வித்தியாசம் என்னவென்றால், அரசாங்கத்தின் வருடாந்திர வரி வருவாய் தொடர்ந்து உயரும்.வருடாந்திர திட்டத்தைபட்ஜெட் அல்லாத கடன், நேரடி பொறுப்புஅல்லது அரசியலமைப்பிற்கு அப்பாற் பட்டது என்று யாரும் கூறுவதில்லை.
கிப்பி வருடாந்திர நிதி சுழற்சியை விடபெரிய அளவிலான திட்டங்களை மேற் கொள்ளாது.மிகவும் துல்லியமான சொத்துபொறுப்பு பொருத்தத்தை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே கிப்பி புதிய திட்டங்களை எடுக்கும்.சிஏஜி செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த மாதிரியில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதுதான். மேலும் சில சமயங்களில் பொறுப்பு கிப்பியின் சொத்துக்களுக்கு அப்பால் வளர்ந்து அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பாக மாறும். அத்தகைய ஆய் வினைச் செய்ய அவர்கள் தயாராக இல்லை.அரசமைப்பின் 293 ஆவது பிரிவு மாநில அரசுகள் வாங்கும் கடன்களைப் பற்றியது.கிப்பி ஒரு மாநில அரசு அல்ல. இது அரசாங்கத்தால் நடத்தப்படும் கார்ப்பரேட் அமைப்பு.கடன் பெற பிரிவு 293 இன் கீழ் மத்திய அரசின் அனுமதி தேவையில்லை.வெளிநாட்டு கடன் வாங்குவதிலும் இதே நிலைதான். கிப்பி செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி சிஏஜி வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அதை ஏன் மாநில அரசுடன் விவாதிக்கக்கூடாது?மாநில அரசின் கருத்தை அறியாமலே, உருவாக்கப்பட்ட அறிக்கைகளை ஒருதலைப்பட்சமாக திணிப்பதுமாநிலத்தின் வளர்ச்சியை நாசமாக்குவதற்கான மத்திய அரசின் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், பாலங்கள் மற்றும் தகவல்தொடர்புகளின் இணையற்ற விரிவாக்கங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டுமா என்பது இவர்கள் கிளப்பியுள்ள விவாதத்தின் மையமாக உள்ளது.
இவை உட்பட எதையும் எந்தவொரு கட்டத்திலும் மாநில அரசாங்கத்துடன் விவாதிக்கவோ ஆலோசிக்கவோ சிஏஜி முன்வரவில்லை.இது தணிக்கை நடைமுறைக்கு எதிரானது. சிஏஜியின் ஒருதலைப்பட்ச நிலைப்பாடு கேரளாவின் வளர்ச்சிக்கான பாதையை மூடுவதாகும்.இதை எதிர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் கேரளாவை நேசிப்பவர்களும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு தாமஸ் ஐசக் கூறினார்.