tamilnadu

img

கொரோனா தனிமையில் இருந்து மீள பினராய் விஜயன் அறிவுரை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளாவில் இன்றளவும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. கேரளாவில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் கண்காணிப்பில் உள்ளனர்.இதைத்தொடர்ந்து இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு ட்விட்டரில் அறிவுரை வழங்கி உள்ளார். 
கொரோனா சிகிச்சையின்போது தனிமை மற்றும் மன அழுத்தம் பலருக்கும் கடினமானதாக இருக்கும். இது மிகவும் இயற்கையானது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் செய்தி உங்களை கவலையடையச் செய்தால் அதைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள். உங்கள் மருந்து மாத்திரைகளை சரியாக உட்கொள்ளுங்கள் புத்தகம் படிப்பது இசை, ஓவியம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள் நாம் மீண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.