திருவனந்தபுரம், ஏப்.16- கொரோனா பரவிவரும் பின்னணியில் கேரள அரசு துவங்கிய கம்யூனிட்டி கிச்சன்கள் மூலம் இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 1034 உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இந்த சமுதாய சமையலறைகள் நடத்தப்படுகின்றன.
படுக்கையில் உள்ள நோயாளிகள், முதியோர், தனித்து வாழ்வோர், தெருவாசிகள், கொரோனா கண்காணிப்பில் உள்ளோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த முன்னுதாரணமாக நடந்துவரும் இந்த திட்டத்தை வேறு சில மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளன.