கொச்சி, ஜுலை 14- திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கைது செய்யப்பட்ட மலப்புறம் நகரைச் சேர்ந்த ரமீஸுடன் தொடர்புடையவர்களையே சுங்கத்துறையினர் இப்போது கைது செய்துள்ளனர். பல தங்கக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய மூவாட்டுப்புழாவைச் சேர்ந்த ஜலால் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம், தில்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் வழியாக கடத்தியது தொடர்பான பல குற்றச்சாட்டுகள் ஜலீலுக்கு எதிராக உள்ளன. இதுவரை சுங்கத்துறையாலும், டி.ஆர்.ஐ.யாலும் இவரைப் பிடிக்க முடியவில்லை. சொப்னா சுரேஷ், சந்தீப் மற்றும் சரித்தும் சேர்ந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள தங்கத்தை நாட்டிற்கு கடத்தி வந்தது ஜலாலும் அவரது கும்பலும் என சுங்கத்துறை கண்டறிந்துள்ளது.