tamilnadu

கேரளத்தில் ஒரே நாளில் 138 கோவிட் நோயாளிகள் வெளியில் இருந்து வந்தோர் 134;குணமடைந்தது 88 பேர்

திருவனந்தபுரம்,  ஜுன் 23-  கேரளத்தில் ஞாயிறன்று 138 பேருக்கு கோவிட் நோய்  தொற்று உறுதி செய்யப்பட் டது. இதில் 87பேர் வெளி நாடுகளில் இருந்தும் 47 பேர்  இதர  மாநிலங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 4 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சை லஜா திங்களன்று செய்தியா ளர்களிடம் மேலும் கூறிய தாவது: தற்போது 1540 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  சிகிச்சை பெற்று வந்தவர்க ளில் 88 பேர் திங்களன்று குண மடைந்தனர். இதுவரை 1,747 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,47,351 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,45,225 பேர்  வீடுகள்-நிறுவன கண்கா ணிப்பிலும் 2126   பேர் மருத்து வமனை கண்காணிப்பிலும் உள்ளனர்.

திங்களன்று 241  பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். திங்களன்று காலை வரை  24 மணி நேரத்தில் 4734 மாதிரிகள் ஆய்வு செய்யப்ப ட்டன. இதுவரை 1,85,903 நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வ கங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 2266  மாதிரிகளின் முடிவுகள் நிலு வையில் உள்ளன.  மேலும்,  சமூக தொடர்பு அதிகம் உள்ள  சுகாதார ஊழியர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரின் 38,502 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 37,539 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியாகின. மறுமுறை ஆய்வு உட்பட மொத்தம் 1,83,201 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. ஞாயிறன்று மேலும் 4  தீவிர நோய் பரவல் பகுதி கள் (ஹாட் ஸ்பாட்) அறி விக்கப்பட்டன. 23 பகுதி கள் தீவிர நோய் பரவல் பட்டி யலில் இருந்து விலக்கப் பட்டன. தற்போது கேரளம் முழுவதுமாக 112 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.

கோவிட் மரணம் 22 ஆக அதிகரிப்பு
கோவிட் 19 நோய் தொற்றுக்கு உள்ளாகி செவ்வாயன்று கொல்லம் மய்யநாடைச் சேர்ந்த வசந்த குமார் (68) உயிரிழந்தார்.  இவர் பாரிப்பள்ளி மருத்து வக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதோடு கேரளத்தில் கோவிட் 19 நோய் தொற்றுக்கு உள்ளாகி உயி ரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.